ஒலி மரபுச் சொற்கள்
-
குரங்கு அலப்பும்
-
புலி உறுமும்
-
குயில் கூவும்
-
யானை பிளிறும்
-
ஆடு கத்தும்
-
ஆந்தை அலறும்
-
சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்
-
மயில் அகவும்
-
நாய் குரைக்கும்
-
பாம்பு சீறும்
விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள்
-
ஆட்டுக் குட்டி
-
யானைக் கன்று
-
கோழிக் குஞ்சு
-
சிங்கக் குருளை
-
குதிரைக் குட்டி
-
புலிப் பறழ்
-
குரங்குக் குட்டி
-
கீரிப் பிள்ளை
-
மான் கன்று
-
அணிற்பிள்ளை
வினைமரபுச் சொற்கள்
(ஒரு எழுவாய், ஒரு பயனிலையை கொண்டு முடிவது வினைமரபு)
-
அம்பு எய்தார்
-
சோறு உண்டான்
-
ஆடை நெய்தார்
-
கூடை முடைந்தார்
-
பூ பறித்தாள்
-
சுவர் எழுப்பினார்
-
மாத்திரை விழுங்கினான்
-
முறுக்கு தின்றாள்
-
நீர் குடித்தான்
-
பால் பருகினான்
தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்
-
மா, பலா, வாழை – இலை
-
ஈச்சம், தென்னை, பனை – ஓலை
-
கம்பு, கேழ்வரகு, சோளம் – தட்டை
-
நெல், புல், தினை – தாள்
-
அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி – பிஞ்சு
பூச்சிகள், பறவைகள், விலங்குகள் – இருப்பிட மரபுச் சொற்கள்
-
கரையான் – புற்று
-
ஆடு – பட்டி
-
மாடு – தொழுவம்
-
குதிரை – கொட்டில்
-
கோழி – பண்ணை
-
குருவி – கூடு
-
சிலந்தி – வலை
-
எலி – வளை
-
நண்டு – வளை
-
யானை – கூடம்
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.